Friday 12 October 2012

சூழும் துன்பம் முழுதாய் மறந்து...

 
இரவின் தனிமையில்...           
அமைதியின் மடியில்... 
இதமாய்க் கயிற்றுக்
கட்டிலில் சாய்ந்தே...
மெல்லிசைப்பாடல்
இசையில் நனைந்து...
உருகும் இதயம்
பரவசம் கொள்ள...
முகிலினுள் தவழும்
நிலவினை ரசித்து...
நட்சத்திரக் கூட்டத்தை
விழிகளால்  விழுங்கி...
சூழும் துன்பம்
முழுதாய் மறந்து... 
வாழ்க்கையை சுகிக்கும்
இரசிகை ஆனேன்...!

 
---கீர்த்தனா---

 

No comments:

Post a Comment