Thursday 11 October 2012

உன்னை அன்றி யார் அறிவார்...

ஆழக்கடலாய்..உள்மனது...
உன்னுள்ளே என்னவென்று
உன்னை அன்றி யார் அறிவார்...!
மனமே அமைதி கொள்...!

உனக்கு நீயே ஆறுதல்
சொல்..எப்போதுமே...!
அமைதியின் மடியில்....
பிஞ்சுக் குழந்தையாய்
நான் தூங்க வேண்டும்...!
சொல்கின்றேன் மீண்டும்...
மனமே அமைதி கொள்...!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment