Monday 15 October 2012

பொட்டிழந்த பொன்மலர்கள்...

முகர மறுத்த வெண்
மலர்களின் வாசம்...
மூடிய சுவர்களுக்குள்...

உணர்வுகள் கருகி
மெழுகாய் உருகி...
பொட்டிழந்த பொன்மலர்கள்
பூவிழந்த பூங்கொடிகள்...!

சமூகத்துப் பார்வைக்
கண்காணிப்புச் சிறையில்...
விலங்குகள் பூட்டிய
கைகளுடன்...
விலங்கு உடைத்து
வெளியேறும் துணிவின்றி...

உணர்வுகள் புதைத்து
கடைசி ஆசையும் சொல்லும்
உரிமையும் இன்றி...
தூக்கு தண்டனைக்
கைதிகளாய்...
மனிதம் செத்த மனிதருக்காய்
தம் வாழ்வை இறப்பித்து...!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment