Sunday 28 October 2012

இனிய நிலாக்காலம்...


பறவைகளின் கொஞ்சலுடன்...
அதிகாலைப் பனி நேரம்...
வீட்டுச்சிறு தோட்டம் தனில்

நான் உலவிய காலம்...!
வண்ண மலர்களுடன்
கதைபேசி...புத்தம் புதுக்
காய்கறிகள் பறித்து...
இன்புற்றிருந்த
இனிய நிலாக்காலம்...
இன்றே எனக்கு...
மீண்டும் வேண்டும்...!

பசுவின் மடி தொட்டு...
அன்னை கறந்த பாலில்...
அருமையாய்ச் சுடுபானம்...
அருந்திச் சுவைத்திருந்த
என் வீட்டுச் சமையற்கட்டு...
இந்த நிமிடம்...
இங்கே வேண்டும்...!

ஊற வைத்த பழஞ்சோறு...
சுட்ட கருவாடு தொட்டு...
சுவைத்துக் களித்திருந்த...
என் வீட்டுத் திண்ணை...
இக்கணத்தில்...
வேண்டும் வேண்டும்...!

வட்டமிட்டு நாமிருந்து...
கூடிக் கூழ் குடித்து...
பேசிக் களித்திருந்த...
என் வீட்டு நிலாமுற்றம்...
இப்போதே...
வேண்டும் வேண்டும்...!

கொட்டும் பனிமழையில்...
எல்லாமும் தொலைத்து விட்டு...
விட்டம் பார்த்திங்கே...
விழிகள் வெறித்தபடி...
இழந்தவையின் பெருமை எண்ணி...
மருகும் நெஞ்சம்...
கெஞ்சும் ஏக்கத்துடன்...
புலம் பெயர் மண்ணிலே...!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment