Friday 5 October 2012

ஏகாந்தம்…..

ஏகாந்தத்தில் மூழ்கிய
மலை முகடுகள்…!
அவற்றைத் தொட்டுத்
தழுவிடத் துடிக்கும்…
வெண்பஞ்சு மேகங்கள்…!

இங்கே வந்து…எனைத்
தழுவிக்கொள் வானமே என
அழைபிதழ் நீட்டும் நீர்நிலை…!
சாரல் மழையின்…
வருகைக்காய் தவமிருக்கும்
இயற்கையின் அதிசயங்கள்…!

நீரை கிழித்து வாழ்க்கைப்பயணம்
தொடங்க காத்திருக்கும்
ஒற்றைப்படகு…!
காதலுடன் உன் கை சேரக்
காத்திருக்கும் என்னுடன்
இயற்கையும் இணைந்து…
ஏகாந்தத்தில் தவிப்புடன்…!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment