Thursday 25 October 2012

தாய்மை உன்னிடத்தில்...

பெண்மை கொண்ட
வரந்தன்னை பெற்றிடாத
வந்தியை…!


உச்சநிலை தாய்மை
தனை உணர்ந்திடாத
உலர் நிலை…!

கற்றவரும் மற்றவரும்
புரிந்து கொள்ளாக்
கொடும் நிலை…!
சமூகத்தின் விஷநாக்கு
கொத்திக் குதறும்
கடும் நிலை…!

தாயுமானவர்க் கடவுளா நீ
இத்தனை கொடுமை செய்தாய்?
பெண்மையே வருந்தாதே…!
தாய்மையை இழக்காதே…!

கடவுளும் வெட்கித்
தலை குனியட்டும்...
உன் செயல் கண்டு…!
சின்னஞ்சிறு பூக்களிடம்
அவன் பறித்த தாய்மையை…
இன்றே நீ கொடுத்து விடு...!
மனம் நிறைந்து....
சிறு பூவொன்றின் தாயாகு...!


---கீர்த்தனா---


No comments:

Post a Comment