Wednesday 24 October 2012

ஐப்பசி 24













பேச்சினில் சமாதானம்
மூச்சினில் காணவில்லை…!
காட்டு விலங்குகளாய்

எப்போதும் வீண்சண்டை…!

வீட்டினில் குழப்பம்
நாட்டினில் குழப்பம்…
விட்டுக் கொடுக்கும்
எண்ணங்கள்…
வீம்பினில் இங்கு
வருவதில்லை…!
அகங்காரம் தலைதூக்கி….
அறிவுக்கண் மறைத்து…
அமைதியை இங்கு
கொன்று தின்றிடும்…!

தாக்கி இன்புறும்
செயலினை விடுத்து…
நோக்கிச் செல்வோம்
சமாதான வழி தனில்…
வெண்புறா மட்டுமா
அமைதித் தூதனுப்பும்…
மானிடப்புறாக்கள்
நாமும் அனுப்புவோம்….!
உலக சமாதான
தினத்தில் இன்று
உறுதி கொள்வோம்…
கொள்கை வெல்வோம்…!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment