Sunday 4 November 2012

மாயை...அதுவே மெய்!

உருவம் கொண்ட
மெய்யும் மெய் !
அருவம் கொண்ட 

உயிரும் மெய்!

உணர்வு கொண்ட
மனிதன் மெய்!
உள்ளம் கொண்ட
காதல் மெய்!

கருணை உள்ள
கடவுள் மெய்!
கண்கள் உணர்ந்த
காட்சிகள் மெய்!

வாழ்வில் காணும்
இன்பங்கள் மெய்!
மனதை உழற்றும்
துன்பங்கள் மெய்!

இல்லை இல்லை
அத்தனையும் பொய்!
அனைத்தும் மாயை
அதுவே மெய்!

---கீர்த்தனா---

2 comments:

  1. // இல்லை இல்லை
    அத்தனையும் பொய்!
    அனைத்தும் மாயை
    அதுவே மெய்! // இந்த வரிகளை படிப்பதற்கு முன், எதிர்மறைக் கருத்துக்களை பதியலாமென இருந்தேன்.. அதற்கு நீங்கள் கடைசியில் வாய்ப்புதரவில்லை :)... நல்ல வரிகள்.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete