Wednesday 7 November 2012

பாலைவனத்தில் பரிதவிப்பு....

பரந்த பாலைவனத்தில்…
கால்கள் சுடப் போகின்றேன்
தனிப்பயணம்!

இலக்கின்றிச் செல்லும்…
முடிவில்லாப்...
பெரும் பயணம்!

சூட்டின் கொடும் வலியில்…
கண்களில் நீர் பெருக…
அருந்த நீரின்றி
வாயும் அதைப் பருக…
மனதின் கடும் காயங்கள்
கொடும் சூட்டிலும் ஆறாமல்!

சுட்டு வெந்த பாதங்கள்…
சுடு மணலில் வீழ்ந்து மடியுமுன்…
மலர் தூவிக் கைகளில் ஏந்த…
அன்புள்ளம் பாய்ந்து வருமோ?

---கீர்த்தனா---

No comments:

Post a Comment