Wednesday 14 November 2012

கொஞ்சும் மழலைகள்....


குவலயம் மகிழும்…
குழந்தையின் சிரிப்பினில்!
குறைகள் யாவும்…
பனியாய் விலகும்!

குவித்த இதழால்…
சிரிக்கும் அழகில்…
சொர்க்க வாசல்…
கண்முன் திறக்கும்!

இதழ்க்கடை நீருடன்…
கன்னத்தில் ஒற்றும்…
ஒழுகும் மென்முத்தம்…
கோடி மலர்களை…
தலைமேற் கொட்டும்!

பாசப் பதிவாய்…
வெண் பஞ்சுத் தொடுகை!
பூக்களின் உதிர்வாய்…
மழலைக் கொஞ்சல்!

மெத்துடல் எம் மேல்…
சரிக்கும் நேரம்…
மொத்தமும் மறக்கும்
பரவசம் பிறக்கும்!

இன்பம் பொங்கும்…
ஒளடத அணைப்பில்
இடர்கள் யாவும்…
பொடிபட்டுப் போகும்!

---கீர்த்தனா---

ஒளடதம் = மருந்து

 

No comments:

Post a Comment