Sunday 4 November 2012

விழி மூடிய கனவிலும்...

தேம்பியபடி
உறங்கினேன்...
மனம் களைத்த

குழந்தையாய்...
வேதனை சூழ்ந்த
மனநிலையில்...!

விழி மூடிய
கனவிலும்
உட்புகுந்தாய்...!
அன்புக்கரம் நீட்டி...
சுண்டினாய்...

விரல்களால்
விழிநீர்த் துளிகளை...!

 
கலங்காதே அன்பே
எதற்குமென
செல்லமாய்க் குட்டு
வைத்தாய்..
உச்சந்தலை தனிலே...
சிரித்தபடி...!

கனவினிலும் ஆறுதல்
தரும் உன் அன்பில்
நெக்குருகிக் கரைந்தேன்....!
பாதுகாப்பின்
மலர்ப்படுக்கையில்...
மீண்டும் சுகமான உறக்கம்...!
இதழ்க்கடையில்
பூத்த சிரிப்புடன்...!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment