Saturday 10 November 2012

இணைவுப்பந்தம்...

சொர்க்கத்திலே திருமணங்கள் 
நிச்சயம்!
தர்க்கத்திலே இருமனங்கள் 
கலைந்திடும்!
பொருந்தாத அலைவரிசை…
வருந்த வைக்கும் வாழ்வுதனை!
காதலிக்கும் போது இன்பம்…
கைபிடிக்கும் போது இல்லை!

மணம் பரப்பும் வாழ்க்கைக்கு…
மனதை நுகரும் திறன்வேண்டும்!
உணர்தலும் பகிர்தலும்…
இயைதலும் இழைதலும்…
வேசம் இல்லா பாசமும்…
நேசம் உள்ள நெஞ்சமும்…
இதமாக இணைந்தாலே…
இணைவுப்பந்தம் நிலைத்திடும்!
இன்பம் அங்கே கொழித்திடும்!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment