Monday 12 November 2012

வறுமையின் கொதிப்பு…

பட்டாசு செய்யும்
பட்டாம் பூச்சிக்கு…
பச்சரிசிச் சோறுமில்லை…
பட்சணங்கள் ஏதுமில்லை…
பட்டுப் பூஞ் சிரிப்புமில்லை…
புத்தாடைப் பொசிப்புமில்லை!

பாழும் வயிற்றுக்காய்…
பாடுபட்டு வேலை செய்யும்…
பச்சை மண்ணின் சோகம் தனை…
பண்பு கொண்டோர் யாரறிவார்? 
 
பரிதவித்து இரசாயனம் தொட்டு…
பற்றியெரியும் கைகளோடு…
பசித்திருக்கும் வயிறும் எரிய…
பட்டுக்கன்னதில் நீர்க்கோடுகள்
பதித்த அழியாத கோலங்கள்!

பதறுகிறது வேதனை சுடும் நெஞ்சம்!
பற்றியெரிகிறது உணர்வுத்தணல்கள்!
பாரதிகள் எங்கே சென்றீர்?
பிஞ்சு நெஞ்சம் காப்போம் வாரீர்!!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment