Sunday 18 November 2012

மின்சாரப் பரிமாற்றம்!

நான்கு விழிகளின்…
மின்சாரப் பரிமாற்றம்!
பொங்கிப் பிரவகிக்கும்… 
நூறு கவிதைகள்!
நர்த்தனம் ஆடிடும்…
இதயத்தின் அதிர்வுகள்!

விரல்கள் மீட்டா…
அற்புத கானமாய்…
விரவிப் பரவிடும்…
வீணையின் நாதம்!

மாயம் செய்யும்…
அற்புத மனக்கலப்பின்…
பரவசக் களிப்பினில்…
புண்ணிய தேசம் நோக்கி…
சிறகடிக்கும் மனப்பறவை!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment