Saturday 17 November 2012

ஒருநாளின் விழிப்புணர்வு… நூறாண்டின் வாழ்வுக்கணக்கு!


இளம் தளிரை முடக்கிவிடும் 
இளம்பிள்ளை வாதம் அது!
ஒருநாளின் விழிப்புணர்வு…
நூறாண்டின் வாழ்வுக்கணக்கு!
சிறுதவறின் அறுவடையாய்
சிறகொடியும் இளம்விதைகள்!

இழப்பது எத்தனை ?
சுமப்பது எத்தனை ?
துள்ளித் திரியும் பிராயமதை…
பலிகொடுத்து ஏங்கி நிற்கும்!
பள்ளி செல்லும் ஆசைதனை…
பறிகொடுத்து பதறி நிற்கும்! 
 
இரக்கமுள்ளோர் அனுதாபம்…
இரக்கமற்றோர் ஏளனம்…
இணைந்த களத் தாக்குதலால்…
வலியின் பிடியில் பிஞ்சுமனம்!

உளம் துடிக்கும் வலியறிவீரோ?
உடல் துடிக்கும் வலியறிவீரோ?
சக்கரநாற்காலி இல்லா ஏழைப்பிஞ்சின்…
நிலமரையும் வலியும் அறிவீரோ?
கள்ளம் இல்லா வெள்ளை உள்ளம்…
கடும்வலி காணும் பாவம் என்ன?

அறிவியல் நிறையுலகில்…
அறியாமை நீங்கி இன்றே…
விழிப்புணர்வு மிகக்கொண்டு…
விடிவிளக்காய் நாமிருப்போம்…
சிறுசுடர்கள் ஒளிவீச்சுக்காய்…!
 
---கீர்த்தனா---

 

No comments:

Post a Comment