Monday 26 November 2012

என்னவளே என்னுயிரே...

உன் மனக் கூட்டுக்குள்
வாழ்ந்திட விரும்பும்
உன்னவன் நானடி
என்னவளே!
என் சுவாசமே
உன் சுவாசமாய்...
என் வலி யாவும்
உன் வலியாய்...

சிரிப்பினில் இணைந்து
அழுகையில் கலந்து...
இன்பம் தந்து துன்பம் சுமந்து...
என்னுயிர் வாரிசைக்
கருவினில் சுமந்து...

கண்களின் வருடலில்
கருத்தினை நிறைத்து...
கருணை வார்த்தையில்
துயரினைக் களைந்து...
உன்னை நீயே
எனக்காய் இழந்தாய்...
இழப்பினில் கூட
இன்பம் கண்டாய்!

எழுத்தினில் தானா
உயிரும் மெய்யும்...
இரண்டறக்கலந்து
ஒன்றாய் இணையும்?
இரு மெய் ஒரு உயிர்...
இரு மனம் ஒரு மனம்...
ஒன்றாய் ஆனோம்
நானும் நீயும்!

என்னில் கலந்து எனக்காய் வாழும்...
உன்னைப் போற்றுதல்
அடிமைத்தனம் என்றால்...
தூற்றுவார் தூற்றட்டும்...
என்னவளே...என்னுயிரே...
மகிழ்வுடன் நெகிழ்வுடன்
உன் அன்புக்கு அடிமையாய் நான்!

---கீர்த்தனா---

பெருமையுடன் என்னுயிர்த்தோழன் கருத்தில் இருந்து கருவாய் இக்கவிதை...

No comments:

Post a Comment