Saturday 10 November 2012

வண்ண நிலா...

சுட்டும் இருவிழிக்குள்
கருந் திராட்சைப்
பழங்கள் இரண்டு...
அங்கும் இங்கும்
உருண்டோடி
விழி விரித்துக்
கதை பேச...

செப்பு வாயிதழ்கள்
ரோஜாமொட்டாய்
குவித்துச் சுழித்து...
நெஞ்சப்பூவை
அள்ளிச் செல்ல...
 
கால் முளைத்த
சிறு பூவின்...
கன்னக்குழிச் சிரிப்பு
மூவுலகமும்
மறக்கச் செய்ய...
வைத்த கண் வாங்காமல்
மெய் மறந்த ரசனையுடனே
நான்...!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment