Thursday 28 February 2013

அன்பென்னும் நூலிழை...

எங்கும்...எங்கெங்கும்,
இருள் சூழ் அடர் காடு!
உடல் நடுங்க மனம் பதைக்க,
தனித்து விடப்பட்ட
ஆட்டுக் குட்டியாய்....
ஓநாய்க் கூட்டத்தின்
மத்தியில் நிற்கும் உணர்வுடன்!

கடித்துக் குதறத் துரத்தியபடி
சோதனைகள், வேதனைகள்
வாழ்வில் சூழ்ந்து மொய்க்க
தன்னம்பிக்கை மெதுவாக
இறப்பிக்கப் பட்டபடி...

துணையாய் உற்ற உறவின்
தோளில் தட்டும் சிறு ஸ்பரிசம்...
உன்னுடன் நான் என
உணர்த்துகையில்...
மீண்டும் மெதுவாக மெதுவாக
துளிர்விடும் தன்னம்பிக்கை!
அன்பென்னும் நூலிழை...
நகர்த்திச் செல்லும் வாழ்வினை...

---கீர்த்தனா---

No comments:

Post a Comment