Tuesday 12 February 2013

மலர வைப்பாய் பகலவனே....

கமலமவள் செவ்வதனம்
கூம்புவதும் மலர்வதுவும்
பகலவனின் வரவதனால் - அவள்
தேம்புவதும் தெரியாமல்
சென்று சென்று தான் வருவானோ?
அவன் திசை நோக்கியே
காதற் தவம் செய்து சளைக்காமற்
காத்திருக்கும் செவ்வெழிற் பூமகளை
மலர வைப்பாய் பகலவனே....

---கீர்த்தனா---

No comments:

Post a Comment