Saturday 23 February 2013

இறக்கைகள் விரி!!

இலட்சியக் கனவுகள்,
இரத்தத்தின் துடிப்பினில்!
இன்னல்கள் இருட்டாய்,
இலவம் பஞ்சு நெஞ்சுக்குள்...
இடியாகத் தாக்கிச் செல்கையில்...
இடித்து உரைத்து விடு,
இதுவல்ல உன் பணி என...
இளஞ்சூரிய ஒளி உன்முன்னே...
இறக்கைகள் விரி!!!
இலகுவாய்ப் பற!!!
இனிய தேசத்தில் குவிந்திருக்கும்
இனிப்பான வெற்றிக் கனிகளை...
இக்கணமே எட்டிப்பறி!!!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment