Wednesday 13 February 2013

கலைந்ததுவோ கூடுமிங்கு!

வேடந்தாங்கல் வந்ததன்று!
புலம்பெயர்ந்த பறவையொன்று!
அன்பினை ஊட்டி ஊட்டி,
இழைத்ததொரு குருவிக்கூடு!

தாய் போல அரவணைத்து,
தாங்கியது பெருமையுடன்...
தங்கி நின்ற குஞ்சுகளைத்
தனதன்பு இறக்கைக்குள்ளே!

பெருங்காற்றின் வீச்சினிலே...
கலைந்ததுவோ கூடுமிங்கு!
கூடி நின்ற குஞ்சுகளும்,
திசைக்கொன்றாய்ப் பறந்தனவே!

ஒரு மூலைப் பொந்துக்குள்ளே...
அமைதி இழந்த தாய்க்குருவி,
குஞ்சுகளின் வரவுக்கேங்கி...
கலைந்து சென்ற திசைகள் நோக்கி...
தனியாக ஏக்கத்துடன்...
வேதனைகள் சுமந்தபடி!!!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment