Monday 11 February 2013

கலைநிலாப் பெண்ணே!

கலைந்தவை யாவும் கதையாய்,
கலைநிலாப் பெண்ணே!
கனவுலகில் காண்பேனோ?
கண்ணெதிரில் காண்பேனோ?

கடந்த பொழுதுகளில்
கண்ணிமைக்க மறந்து
ஊடுருவிப் பார்த்த கணங்கள்
உன்னுள்ளே வீழாமற் போனேனோ?

என்னுள்ளே நீ மட்டும்
விதையாய் வீழ்ந்து - பின்
விருட்சமாய் வளர்ந்ததேன்?
இன்று கனவாகப் போனதேன்?
கண்களை மறைக்கும்
சுடுநீரின் வெப்பம்
கனலாய்ச் சுடுவதேன்?

---கீர்த்தனா---

No comments:

Post a Comment