Wednesday 27 February 2013

நட்பான நிலவொன்றை...

மெய் மட்டும் வளர்த்தேன்...
பொய் தொலைத்த நெஞ்சத்துள்!

நட்பான நிலவொன்றை...
மிக மிகப் பத்திரமாய்,
ஒளித்து வைத்தேன் கண்ணுக்குள்!
திறக்க மறுத்தேன் இறுக மூடிய
விழிக் கதவுகளை....

காப்பது ஒன்றே இலட்சியமாய்...
அன்பு ஒன்றே போதனையாய்...
சூல் கொண்ட தாயின் கவனத்துடன்!

வெளியே விழத் துடித்தபடி நிலவு
தாய்மையின் பதற்றம் உணராமலே....
புரிந்தும் புரியாதது போல்....

---கீர்த்தனா---

No comments:

Post a Comment