Thursday 7 February 2013

என் மனைத் தேவதை...



  • நீராடிய பூமயில்...
    நிலவாக பூமியில்...
    விரித்த கூந்தல்
    பனித்துளி உதிர்க்க...
    வாராயென அழைத்தது
    வீசிய நறுமணம்!

    பின்புறம் அணைத்து
    முகம் புதைத்தேன் - என்
    மனைத் தேவதை
    குழற் கற்றை துழத்தி
    வாசம் நுகர்ந்தேன்...
    சுவாசம் நிறைத்து!

    இன் காதல் மையலிலே
    மெதுவாகச் சாய்த்தாள் - தன்
    மென் தேகப் பஞ்சுடலை...
    இயைவாக எந்தன்
    நெஞ்சணையில்...

    நெற்றிச் சுருளின் நீர்த்திவலை
    சற்று உருண்டது நாசிதொட்டு - பின்
    ஒற்றி மகிழ்ந்தது மென்னிதழை - நான்
    முற்றும் முற்றும் எனை இழந்து
    சுற்றும் பூமியை மறந்து நின்றேன்...

    ---கீர்த்தனா---

  • துழத்தல் = அளைதல்
  • No comments:

    Post a Comment