Monday 4 February 2013

என் மனைத் தேவதை...


நீராடிய பூமயில்...
நிலவாக பூமியில்...
விரித்த கூந்தல்
பனித்துளி உதிர்க்க...
வாராயென அழைத்தது
வீசிய நறுமணம்!

பின்புறம் அணைத்து
முகம் புதைத்தேன் - என்
மனைத் தேவதை
குழற் கற்றை துழைத்து
வாசம் நுகர்ந்தேன்...
சுவாசம் நிறைத்து!

இன் காதல் மையலிலே
மெதுவாகச் சாய்த்தாள் - தன்
மென் தேகப் பஞ்சுடலை...
இயைவாக எந்தன்
நெஞ்சணையில்...

நெற்றிச் சுருளின் நீர்த்திவலை
சற்று உருண்டது நாசிதொட்டு - பின்
ஒற்றி மகிழ்ந்தது மென்னிதழை - நான்
முற்றும் முற்றும் எனை இழந்து
சுற்றும் பூமியை மறந்து நின்றேன்...

---கீர்த்தனா---

No comments:

Post a Comment