Thursday 14 February 2013

என்றும் சாஸ்வதமாய்.....

எல்லோரிடமும்
பொய்ப்பதில்லை...காதல்!
பொன்னைப்போல் காக்கும்
பொழுதெல்லாம் உருகும்
நிறம் மாறாக் காதல்
நிஜமாக உண்டு!

ஓரிடம், ஒருபுள்ளி நோக்கியே...
தவமாய் தியானமாய்...
உயிராய் உணர்வாய்..
ஒருவரிடம் பொய்த்தாலும்
இன்னொருவரிடம்...
பொய்க்காமல்...

உயிர்பூவுக்குள் உறைந்து
காதல் கரைந்து போகாமல்...
உணர்வுகளின் உயிர்ப்பினில்
உளமாரக் கசிந்துருகி...புனிதமான
நூலிழையின் பிணைப்பில்
இறவாமல், கருகாமல்
என்றும் சாஸ்வதமாய்.....

---கீர்த்தனா---

No comments:

Post a Comment