Thursday 14 February 2013

பொக்கிஷமாய்......

காதலில் குலவாப்
பட்சிகள் உண்டோ?
காதல் செய்யா
விலங்குகள் உண்டோ?
காதலை உணரா
மனிதரும் உண்டோ?

ஒருமுறையேனும்
உயிருக்குள் பூக்கும்...
இனிய காதலின் பரவசம்...
பிறர் அறிந்தும் அறியாமலும்,
இதயத்தின் மூலைக்குள்,
பொக்கிஷமாய்...மீட்டலின் சுகமாய்...
இல்லை என்று உரைப்பார்க்கும்
உண்டு என்றே சொல்வேன்...

காதலுணர்வு அது
இயற்கையின் தத்துவம்...
காதல் செய்வதில்,
தவறேதுமில்லை...
ஆதலினால் காதல் செய்வீர்!
விரும்பாத உள்ளத்தை
வற்புறுத்தி வருத்தாது...
உம்மை விரும்பும்
உள்ளத்தினை மட்டும்...


---கீர்த்தனா---

No comments:

Post a Comment