Wednesday 20 February 2013

வெறுத்த உறவு தஞ்சமென.....

பிடிக்கவில்லை என விலகினேன்!
தீண்டாதே எனத் திட்டினேன்!
வருத்தாதே எனக் கெஞ்சினேன்!

யாருனக்குத் துணை இங்கு..
அணைத்துக் கொள்ளேன்
எனை என்றது!

தந்திடுவேன் எண்ணங்களிலே...
சிதறிடும் வண்ணங்களையே....
அழகாய் வடியேன் கவிகளை
நீ என்றது!

தூரச் செல்லும் உறவுகளும்....
தூக்கம் இல்லா இரவுகளும்....
வெறுத்த உறவே தஞ்சமென,
தனிமையிடம் சரண் புகுந்தேன்!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment