Sunday 17 February 2013

அடங்காப் பசியுடன் இருவிழிகள்....

விழிகளைக் கொடையாய்க்
கொடுத்தாயே........
கோடி நன்றி நானுரைப்பேன்!
எத்தனை வித்தைகள்....
வண்ணங்களால் வான்பரப்பில்!
வகை வகையாய் நிலப்பரப்பில்!
எந்த ஓவியன் இவை வரைந்தான்,
அழகு ஆயிரம் கண்களை நிறைக்க!

நீர்நிலைகள் வானம் பார்த்துக் காதலிக்க...
கமலப் பெண்கள் ஆதவனைக் காதலிக்க...
அல்லிப்பெண்கள் மதியழகைக் காதலிக்க...
தாமரை இலைகளோ ஒட்டாமல்
உருண்டோடும் நீர்துளியைக் காதலிக்க...
தொட முடியா வானத்தினைத்
தொட்டு விட நிலம் துடிக்க....

இன்னும் இன்னும் எதை சொல்ல
ஒன்றின் மேல் ஒன்று தீராக் காதலுடன்....
அத்தனை அழகையும் ஒன்றாய்...
அடங்காப் பசியுடன் - என்னிரு
விழிகள் விழுங்கின மிச்சமின்றி...

---கீர்த்தனா---

No comments:

Post a Comment