Friday 15 February 2013

என் எழுதுகோலால்..என்ன பயன்??

தெருப் புழுதியில் சிறுமலராய் நீ
எதற்காய் எதற்காய் ஆனாய்???
உன் பிஞ்சு வதனம் தேக்கிய
உணர்வுகளின் மொழிதனை,
படித்து விட்ட ஒரு கணத்தில்...
இதயக் கூடு பிளந்து...
துளித் துளியாய்ச் சொட்டுக்கள்
உதிர்வதை உள்ளே உணர்கிறேன்!
அடிவயிற்றின் பசித்தீயை,
தார்ச்சூடும் வென்றதுவோ பூஞ்சிட்டே??
என்ன பயன்....பசி தீர்க்கா
என் எழுதுகோலால்??
உள்ளே சொட்டுக்கள் உதிர்கின்றன
மீண்டும் பிழிந்து பிழிந்து....

---கீர்த்தனா---

No comments:

Post a Comment