Monday 4 February 2013

மூடு பனிக்குள் புதைந்து...

வெண்ணிற ஆடையில்...
மௌன தேவதைகளாய்
ஒவ்வொரு மரங்களும்....

விறைத்து நின்றது இயற்கையும்
மூடு பனிக்குள் புதைந்து...
அசாதாரண அமைதியுடன்...

பார்வையினூடே நெஞ்சச் சிறைக்குள்
குளிரின் அத்து மீறிய ஊடுருவல்...
சுடுபானம் தேடின நாடி நரம்புகள்...

கதிரவனை எதிர்நோக்கிக்
காதலுடன் இரு விழிகள் - அவன்
வெப்பத் தழுவலுக்காய்க் காத்திருக்கும்
கணங்கள் யுகங்களாய்...

பஞ்சுச் சிறகுக்குள்
நெஞ்சக் குளிர் மறைக்க
சிலிர்ப்புடன் மரக்கிளையில்
சின்னப் பறவைகள் - அவற்றைப்
போர்வை கொண்டு போர்த்திடத்
துடிக்கும் என் கரங்கள்....

---கீர்த்தனா---

No comments:

Post a Comment