Wednesday 27 February 2013

வாழ்வியலின் தொடர் தேடல்...

எதுவோ புரிந்தும்...
எதுவுமே புரியாமலும்...
காலத்தின் சுழற்சியின்,
கோலத்தின் மிரட்சியில்!

கடிதான மனங்களும்,
இனிதான மனங்களும்!
நிறம் மாறும் குணங்களும்,
நிலைத்திருக்கும் குணங்களும்!
எதிர்மறை எண்ணங்களும்,
நேரான எண்ணங்களும்!

புரிதல் இல்லாப் பிணைப்புக்களும்,
புரிதல் கொண்ட பிணைப்புக்களும்!
பற்றாத அன்பும்,
வற்றாத அன்பும்!
படைப்பியலின் தத்துவங்கள்!
வாழ்வியலின் விதிமுறைகள்!

எதற்காக எதற்காக
புரிதல் இல்லாப் படைப்புக்கள்???
ஆயிரமாயிரம் வினாக்குறிகளுடன்
முற்றுப்புள்ளியில்லாத் தொடர் தேடல்கள்!
ஆயினும் ஆயினும் சோர்வின்றிய பயணம்...
தொடரட்டும் தொடரட்டும்...
வெற்றித் தேசம் நோக்கி...

---கீர்த்தனா---

No comments:

Post a Comment