Saturday 9 February 2013

ஓடு ஓடு வேகமாக...

ஓயாமற் துரத்தும்
துன்ப அலைகளின்,
துரத்தலின் வீரியத்தால்
கலங்காதே மனமே!

எழுச்சி கொண்ட
வேகக் குதிரையாய்,
முன்னோக்கிப்
பாய்ந்து செல்!

ஒருகணம் தாமதித்தாலும்
இழுத்துச் சென்று மூழ்கடிக்கும்...
ஆழக் கடலினுள்
மீள முடியாமலே...
ஓடு ஓடு வேகமாக,
மிக வேகமாக....
காற்றைக் கிழித்தபடி...

---கீர்த்தனா---

No comments:

Post a Comment