Thursday 7 February 2013

ஜீவ மழை....


அன்பின் ஜீவ மழைத் துளியின் ...
சிறுதூறல் நனைத்து விட்டால்...
புதிதாய்ப் பிறப்பேன்!
எழுத்தாணி எடுப்பேன்!
எழுச்சிதரும் எழுத்தினிலே...
சமூகப் பிழை களைவேன் - முண்டாசுக்
குருவின் தங்கப் பணி தொடர்வேன்!

பசித்திருக்கும் தமிழ்த் தாயைப்
புசிக்க வைத்து நான் மகிழ்வேன்!
இயற்கையையும் இரசிப்பேன்!
இனிதான உண்மை நட்பின்...
இன்பெருமையும் எடுத்துச் சொல்வேன்!

உயிர்க் காதலையும் உணர்வேன்!
ரசம் நிறைந்த தாம்பத்யம்...
விரசம் இன்றியே வரைவேன்!
பிணி வழங்கும் வலி விழுங்கி
இனிதாகப் புன்னகைப்பேன்!
இந்த நொடி முதல் - புத்தம்
புதுப்பூவாய் நான் மலர்வேன்!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment