Saturday 2 February 2013

என்னுயிர் பாரதி...! 2


நெஞ்சினுள் வாழும்
என்னுயிர் பாரதி...!
சமூகச் சாக்கடைகளை
மிதித்தபடி நடக்கின்றேன்,
மாற்றிடுவேன் எனும்
நம்பிக்கையில்...!

மந்தைகளாய் வாழும்
மாந்தர் மத்தியில்...
மனிதத்தைத் தேடிய
என் பயணம்!
நல்லவர் கெட்டவர்
பிரித்தறிவோம்!
வீணர்கள்   யாவரையும்
மிதித்திடுவோம் !
சுயநலம் கொண்ட  மனங்களுக்கு
பொதுநலம் யாதெனக்
கற்றுத் தருவோம் !

உன் பக்தையாய் வாழும்
தகுதி இல்லையென
ஒருகணம் எண்ணிய
தன்னிரக்கம் தொலைத்தே...
வீறு கொண்டெழுந்தேன் - இனி
ஏறு போல் நடப்பேன் !!
நீறு பூத்த இலட்சிய நோக்கை
பற்ற வைப்பேன்...பெரு நெருப்பாய்
உன் இலட்சியம் காப்பது ஒன்றே
பெருங் கடனாய் ....!

---கீர்த்தனா---


No comments:

Post a Comment