Sunday 10 February 2013

தெய்வம் நீ...

எத்தனையோ கவி வரிகள்
எழுதுகின்றோம் விதவிதமாய்...

எம் அன்னையவள் பெருமைதனை
எழுதிவிடத் துடிக்கையிலே,
எந்த வார்த்தை கோர்
த்தெடுப்பேன்
என்பது தான் தெரியவில்லை...

இன் தமிழன்னாய் உதவிடுவாய்...
என் அன்னை பெருமை சொல்ல...

என்னுள்ளில் துடிக்கும் பாசத்தில்
என்னுயிர் உருகிச் சொல்வதொன்றே...
கற்பனைத் தெய்வத்தின் வடிவந்தனை
கண்முன்னே காண வைத்த தெய்வம் நீ

---கீர்த்தனா---

இனிய அன்னையர்தின வாழ்த்துக்கள் என் செல்ல அம்மா...

No comments:

Post a Comment