Tuesday 9 April 2013

செல்வ மகன்





அன்றைய நாளில்
இறக்கைகளுக்குள்
பொத்தி வைத்து
உறங்கிய ஞாபகம்
இந்த நிமிடம் போல்....

"ங்கா" எனும் மெல்லிய
இனியமொழி முனகலுடன்
பஞ்சுடல் மென்ஸ்பரிசம்
மென்மையாய் நெஞ்சுக்குள்
இன்னும் வாசத்துடன்....

பட்டுக் கை கால்கள்
மெல்ல அசைத்தசைத்து
மெத்தென உதைத்து...
கன்னம் குழிய குழியக்
கொள்ளை கொண்டு சிரித்து....

தேனாய் எச்சில் ஒழுக ஒழுக
முத்து முத்தம் பதித்து...
ஒரு போதுமே அழுது
அழிச்சாட்டியம் பண்ணியதில்லை
அம்மாவின் சிறகிழப்பை அறிந்து
பிறந்த செல்வம் போல்...

இன்று மூவாறு நிறைந்து...
அண்ணார்ந்து நான் பார்க்கும்
உயரத்தில் வளர்ந்து... நான்
பெற்ற செல்வ மகன்...
நெஞ்சமெல்லாம் நிறைந்து

வாழ்த்துகின்றோம்... நீ
பிறந்த இந்நாளில்
பார் போற்றும் பெருமையுடன்
நீடூழி வாழ்க வாழ்க!!!

2 comments:

  1. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அன்புடன் நன்றி :)

      Delete