Sunday 14 April 2013

வருக வருக சித்திரைப் பொன்மகளே!!!!

ஆலய மணிகள் எல்லாம்
வேத கான ஒலி எழுப்ப!!
நாத இசை எங்கும்
தென்றலிலே தவழ்ந்து செல்ல!!

செந்தூரப் பொடி தெளித்து
செங்கதிரோன் ஒளி பரப்ப!!
நந்தவனப் பூம்பாவையர் தம்
இதழ் விரித்து சுகந்தம் தர!!

சிங்காரச் சிறகடித்து - சிறு
பறவையினம் பாட்டிசைக்க!!
பாற்கடலும் பொங்கிப் பொங்கி
நடனமாடி வரவேற்க!!

நா வல்ல பாவலரும்
பா வெல்லத் தமிழிசைத்து
சொல்லமுத முத்தாரம்
சிறப்பாகக் கோர்த்து வைக்க!!

தித்திக்கும் பொங்கலுடன்
தேமதுரக் கனி படைத்து,
எத்திக்கும் இன்பங்கள்
நித்தியமாய்ப் பொங்கிடவே!!

சித்திரைப் பூமகளின்
முத்திரை பதிக்க வரும்,
கற்கண்டு வருகைக்காய்
வண்ண வண்ணக் கனவுடனே
தமிழன்னை பிள்ளைகள் நாம்!!

விஜய வருடமதை வரவேற்கக் காத்திருக்கும் அனைத்து அன்புறவுகளுக்கும்....அன்புகனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்... :)))))))))))))))

அன்புடன் கீர்த்தனா ( கீதா ரவி )

4 comments:

  1. கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பாக வாழ்த்தியதுக்கு நன்றி தோழமையே...அத்தனையும் பெற்று நீங்களும் வாழ்க...

      Delete
  2. அருமை. தங்களுக்கும் இனியப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அன்பாக வாழ்த்தியதுக்கு நன்றி....உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழா

      Delete