Monday 15 April 2013

இரக்கச் சொட்டுக்களால் நனைத்து விடு...

சொட்டுச் சொட்டாய்
குருதி உதிர்க்கும்
அன்பினில் வாடி
பலமிழந்த ஓரிதயம்...

ரௌத்திரம் கொண்டு
மிதிக்காதே என்னுயிரே...
துடிப்பது என்றோ
ஒருநாளில் எனினும்-உனை
ஆனந்தப்படுத்திய உறவு...

இரக்கச் சொட்டுக்களால்
நனைத்து விடு...
இரத்தச் சொட்டுக்களை
இரசிப்பவன் நீயல்ல என்னுயிரே...
இல்லையெனின்
என்னுயிரைத் தின்றுவிடு!!

ரணத்தின் வடிவம்
அறிந்தவன் நீ
வந்து விடு இந்நிமிடம்...
பூக்களினால் காயங்களினைத்
துடைத்துவிடு...

---கீர்த்தனா---

1 comment: