Friday 19 April 2013

கருவாய் நட்பினை நாம் சுமப்போம்...

ஒரு சிறு வாசகம்
பெரும் திரு வாசகமாய்...
ஒரு தேற்றும் பார்வை - வருடும்
அரு மயிலிறகாய்...
இரு மனதின் நேசம்
ஒரு மனதின் நேசமாய்...
உரு இல்லாக் காற்றினூடே
பெரும் அன்பின் பரிமாற்றம்
மரு இல்லாப் புனிதத்துடன்..

கரும் மனதுகள் சில - மாசற்ற
அரும் அன்பினைப் புரியாமல்
பெரும் வலி கொடுத்தாலும்...
தரும் பாசம் என்றுமே....
வெறும் வேசமல்ல உணரப்படுகையில்
நறு மணம் வீசும் நல்நட்பு என்றென்றும்...
பெறும் உன்னதப் பதிவாய்
பெரும் நட்புக்கு இலக்கணம்
இரு அன்புள்ளங்கள் நாமென்று!

உருவில்லா உயிர்த் தோழமை
உருவாக்கும் பெரும் சாதனை!!
கருவினைத் தாய் சுமப்பாள்
இரு ஐந்து மாதங்கள்!
கருவாய் நட்பினை நாம் சுமப்போம்
இரு ஏழு ஜென்மங்கள்!

---கீர்த்தனா---

1 comment:

  1. நட்பின் சிறப்பிற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete