Wednesday 17 April 2013

தீந் தமிழ்த் தாய் தேவதையே!!!


சொல்லாட்சி நான் புரிய
நல்லாசி தா!! தமிழ் அன்னாய்!!
உன் மாட்சி நா நிதமும்
தேன் கொண்டு பா புனைய!!

இன் இன்பக் கவியினிலே
என் துன்பம் புவியினிலே
இல்லாமல் ஓடி விட - உன்
நல்லாட்சி நடம் புரிய!!

தீந் தமிழ்த் தாய் தேவதையே
தேனமுதம் ஊட்டி விடு!!
தீராத பசியோடு தினம்
காத்திருப்பேன் புசிப்பதற்கு!!

வாஞ்சையுடன் பரப்பிடுவேன்
தீஞ்சுவையின் பெருமை தனை
தரணி எங்கும் மணம் கமழ
தங்கத் தமிழர் மனம் குளிர!!

---கீர்த்தனா---

2 comments: