Saturday 13 April 2013

கத்தும் கடலலை


நட்ட நடு நிசியில்
கத்தும் கடலலையின்
எட்டித் தொடும் முயற்சி
வட்ட நிலா அதனைத்
தொட்டுப் பார்த்துவிட
வெள்ளி நுரை அள்ளித்
துள்ளித் துள்ளி நிதம் - ஓங்கி
உயர்ந்தெம்பி ஓயா முயற்சியுடன்...

எட்டாக் கனியமுத
வெண்ணிலாப் பெண்ணவளும்
மேகப் படையணியின்
வேகப் பாதுக்காப்பில்...
நோக வைத்தேன் கடலலையே
சோகம் தவிர் மேகம் தொட்டு
மழையாய் உனைத் தீண்டுவேன்
இழைந்து இழைந்து எனைக்
குழைவாய் அணைத்துக் கொள்ளென்றாள்...

---கீர்த்தனா---

No comments:

Post a Comment