Saturday 20 April 2013

ஜனனம் எதற்காய்

எண்ணிய பெருமை
அத்தனையும் பொய்மை
திண்ணமாய் எண்ணியவை
எதுவுமே உண்மை இல்லை

வன்மை மனங் கொண்ட மனிதர்...
எங்கேயும் எங்கேயும்.....
தேடி அலைந்தும் காணவில்லை
உண்மை அது எங்கே இவ்வுலகில்...

மேன்மை வைத்து பூஜித்தேன்
வேஷம் கொண்ட பொய்முகங்கள்
ஜீரணிக்க முடியாமல்....
மரணம் கொண்டது மனது
ஜனனம் எதற்காய் இவ்வுலகில்
கொண்டேன் நானும் புரியவில்லை
வலிகள் வலிகள் போகும்
வழியெங்கும் வலிகள்

---கீர்த்தனா---

No comments:

Post a Comment