Sunday 21 April 2013

வசந்தகாலப் பறவைகளாய்....

மஞ்சட் கதிர் பரப்பி
சன்னல் வழி வழியே
புலர்ந்தது எழு என்று
பொன்னொளித் தலைவனவன்
மெல்லவே தேகம் சுட்டான்!

சின்ன விழி மலர
சன்னல் திரை விலக்கி
எட்டிப் பார்க்கையிலே
கொஞ்சும் பறவை ரெண்டு
ஒரு கிளை விட்டு
மறு கிளை தாவி
காதற் குலவல் கொண்டு
கொஞ்சும் இசை மொழியில்
நெஞ்சை நிரப்பினவே...!

வெண் பனி துரத்தி விட்டு
இன் முகம் மலர்த்தி நின்று
வண்ணங்கள் விழி பருக
வசந்தத்தை வரவேற்று...
பனி பொழியும் நாட்டினிலே
வசந்தகாலப் பறவைகளாய்....!

---கீர்த்தனா---

2 comments: