Saturday 27 April 2013

இச்சையுடன் காதல் செய்தேன்...

வண்ணங்கள் ஆயிரம்
வஞ்சியின் நெஞ்சுக்குள்!
கொஞ்சிடும் காதலில்
கொஞ்சமாய்க் கவிதைகள்!

பஞ்சமின்றி அருவியாய்க்
கொட்டிடக் கொட்டிட!
கண்களும் சொக்க
மற்றதெல்லாம் மறக்க!
இயற்கை வண்ணக் காதலனும்
முழுமையாய் மனம் நிரப்ப!

இச்சையுடன் காதல் செய்தேன்
இனிமேலும் காதல் செய்வேன்!!
துச்சம் இனி துன்பம் எல்லாம்
மிச்சம் வலிகள் இனியும் வேண்டாம்!!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment