Sunday 7 April 2013

நான் நீயாக...

நான் நானாக வாழ்ந்ததை விட
நான் நீயாக வாழ்ந்த கணங்களே
அதிகமாய்...... உந்தன்
உணர்வுகளில் ஆழ்துன்பம் உண்டு
உதட்டின் சிரிப்பினில்,
வலியின் விழுங்கல் உண்டு
நானறிவேன்.... ஏனெனில்
நீயறியாமலே உன் துன்பம்
சுமப்பவள் நான்...அறிவாயோ என் அன்புக் குழந்தை நீ
இறுதிவரை உனக்காய் சுமப்பேன்
தாலாட்டும் தாயாய் இருப்பேன்...
அன்பின் வடி
வினில் இறைவன்
உன்னிடமும் என்னிடமும்...

--- கீர்த்தனா---

2 comments:

  1. உயிர் நட்பின் வரிகள் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தொடர்சியான பின்னூட்டங்களுக்கு மிகவும் நன்றி சார்.. :)

      Delete