Monday 15 April 2013

அரு திருநங்கையர்...

ஆண்டவன் அன்பினில்
மலர்ந்தது ஓரினம் - அவன்
அருளினில் விளைந்தது
அழகிய உன்னதம்!!!
அருள்நிறை நங்கையர்
அரு திருநங்கையர்!!


உருகும் உணர்வுகள்
கருக்கினர் தீயினில்... 
கருவினில் சுமந்தவள்
அருகினில் வளர்ந்தவர்
தெருவினில் வீசினர்....
பூஜை மலர்களின்
புனிதம் புரியாமலே!!!

அர்த்தநாரீஸ்வரர்க் கடவுளை
அர்த்தமுடன் வணங்கும் நாம்...
வணங்கிட வேண்டாம்...
குணமுள்ள திருநங்கையவள்
மனம் மதித்தால் அது போதும்
மணம் வீசும் அவள் வாழ்வும்!!!

---கீர்த்தனா---

2 comments:

  1. /// மனம் மதித்தால் அது போதும் ////

    இது ஒன்றே போதும்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மிகவும் நன்றி தோழமையே...

    ReplyDelete