Friday 3 May 2013

இசையொன்று படைத்தாயே..

இழந்தவை ஏராளம்!
இழப்பதற்கு ஏதுமில்லை!
மனம் தடவும் மயிலிறகாய்
பாட்டொன்று உண்டு!
"குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா"

வலிகளின் தடங்கள் - என்
வாழ்க்கை நானறிவேன்!
வரமாய்த் தந்தாய் - உன்
கருணை இதுவா நானறியேன்!

இருப்பினும் குறை ஒன்றும்
இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா!
இசையொன்று படைத்தாயே
மனம் தன்னைத் தாலாட்ட
குறை ஒன்றும் இல்லை கண்ணா!

---கீர்த்தனா---

2 comments:

  1. /// இசையொன்று படைத்தாயே
    மனம் தன்னைத் தாலாட்ட ///

    இது ஒன்றே போதும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete