Monday 21 January 2013

கருகும் பிஞ்சு மலர்கள்

பேரம் பேசும்
வாழ்க்கைத் துணைகள்!
விட்டுக் கொடுப்பு
மக்கிப் போய்...
வீண் பிடிவாதம்
முற்றிப் போய்...

மூர்க்கம் கொண்ட
ஆண்மையும் பெண்மையும்...
வாழ்வின் வசந்தம்
தொலைத்து விட்டு...
உணர்வுப் பூகம்பத்தில்
உள்ளம் வெடித்து...
ஒருவரை ஒருவர் சாடும்
இணைகளின் கொதிப்பில்...
கருகுவதென்னவொ
அவர்தம் பிஞ்சு மலர்கள்!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment