Wednesday 16 January 2013

புலம்பெயர் வாழ்வில் தாய்மடி தேடி...


பன்னீர்க் குடத்தினுள்
பாண்மை இன்றி நீந்தினேன்,
பரமசுகத்துடன் அன்று!

கண்ணீர்க் குளத்தினுள்
கண்மை கரைய நீந்துகின்றேன்,
கடும்வேதனையில் இன்று!

கண்ணீர் மறக்க - இனிப்
பன்னீர்க்குடம் இல்லையெனினும்
அன்னை மடி உண்டு- அது கூட
என்னை விட்டு...எண்ணில்லாத்
தொலைதூரத்தில்... - மடிதூங்கி
அழும் பொசிப்பின்றி...

---கீர்த்தனா---

பாண்மை - தாழ்ச்சி

No comments:

Post a Comment